சென்னையில் நிகழ்ந்த வன்முறை: 75 பேர் மீது வழக்குப் பதிவு..!

சென்னையில் நிகழ்ந்த வன்முறை: 75 பேர் மீது வழக்குப் பதிவு..!

சென்னையில் நிகழ்ந்த வன்முறை: 75 பேர் மீது வழக்குப் பதிவு..!
Published on

ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் தொடர்ந்து சென்னையில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக மேலும் 75 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மெரினா கடற்கரையில் 7 நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட‌ இளைஞர்களும், மாணவர்களும் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டதுமே சென்னையின் பல இடங்களில் வன்முறை வெடித்தது. ஐஸ்ஹவுஸ் காவல் நிலையம் தீவைத்து எரிக்கப்பட்டது, இணை காவல் ஆணையரின் வாகனம் தாக்கப்பட்டது, கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு‌, மீன் சந்தை தீவைப்பு என பல்வேறு இடங்களில் வன்முறை நிகழ்ந்தது. வன்முறையின் போது காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும், வாகனங்களுக்கு அவர்களே தீ வைத்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டதாக முதலமைச்சர் பன்னீர் செல்வம் சட்டப் பேரவையில் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து நடந்த வன்முறை தொடர்பாக இதுவரை 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், மேலும் 75 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இணை காவல் ஆணையரின் கார் தாக்கப்பட்டது தொடர்பாக, 5 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com