அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. அனைத்து சமூகத்தினருடன் பேச்சுவார்த்தை - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒன்றினைந்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உத்திரவிட கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒன்றினைந்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உத்திரவிட கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதில் அனைத்து சமூகத்தினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவெடுக்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்திரவிட்டிருந்தது. நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்க இருக்கின்ற அமைதி பேச்சுவார்த்தையை முழுமையாக வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com