ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் வரலாறு காணாத போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் மிருகவதை தடுப்புச் சட்டம் -2017 (தமிழ்நாடு திருத்தம்) சட்டப்பேரவையில் கடந்த 23 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com