தமிழ்நாடு
அரங்கை அதிரவிட்ட ஒற்றை காளை... காத்திருந்து செய்த செயல்
ஜல்லிக்கட்டு களமே அதிரும் அளவிற்கு மக்களின் ஆரவாரத்தோடு காணப்படும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு களம்.
அவனியாபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி. அதிரும் வாடிவாசல் அசத்தும் வீரர்கள்.
மொத்தம் 12 சுற்றுகள் உள்ளடக்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தமாக 1000 காளைகளும் 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஒரு சுற்றுக்கான உத்தேச நேரமாக 60 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.
மேலும் முதல் சுற்றில் மஞ்சள் உடையில் களம்கண்டு வருகிறரார்கள் மாடுபிடி வீரர்கள் . அவர்களுக்கு சற்றும் குறைவில்லாத ஜல்லிக்கட்டு காளைகள். இப்படி சீறி பாயும் காளைகளை பாய்ந்து அடக்கும் காளையர்களுக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டு அரங்கமே மக்களின் ஆரவாரத்தில் திருவிழா கோலம் பூண்டு காணப்படுகிறது.