கையில் சூடம் ஏற்றிய தீவிர ரசிகர்
கையில் சூடம் ஏற்றிய தீவிர ரசிகர்pt desk

ஜெய்லர்-2 படப்பிடிப்பு | ரஜினிகாந்தை பார்த்து கையில் சூடம் ஏற்றிய தீவிர ரசிகர்

நடிகர் ரஜினிகாந்தை பார்த்தவுடன் கையில் சூடம் ஏற்றை ஆரத்தி காண்பித்த தீவிர ரசிகர் - ரசிகர்களைப் பார்த்து கையசைத்து விட்டு காரில் புறப்பட்டுச் சென்ற ரஜினிகாந்த்.
Published on

செய்தியாளர்: பிரவீண்

தமிழக கேரள எல்லையான ஆனைகட்டி அடுத்த அட்டப்பாடியில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெய்லர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் 20 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். ரஜினிகாந்தை பார்ப்பதற்கு காலை, மாலை என இரு வேளைகளிலும் ரஜினிகாந்த் தங்கி இருக்கக் கூடிய ரிசார்டிற்கு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

கையில் சூடம் ஏற்றிய தீவிர ரசிகர்
சேலம் | தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பாம்பு பிடி வீரரால் பரபரப்பு

இந்நிலையில் இன்று காலை ரிசார்ட்டில் இருந்து வெளியே வந்த ரஜினியை பார்த்த ரசிகர் ஒருவர் கையில் கற்பூரத்தை ஏற்றி ஆரத்தி காண்பித்தார். இதைத் தொடர்ந்து ரசிகர்களை பார்த்து ரஜினிகாந்த் கையசைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com