சிறைகளில் கலை, கலாசார அம்சங்களை ஊக்குவிக்க வேண்டும்: ஜகி வாசுதேவ்

சிறைகளில் கலை, கலாசார அம்சங்களை ஊக்குவிக்க வேண்டும்: ஜகி வாசுதேவ்
சிறைகளில் கலை, கலாசார அம்சங்களை ஊக்குவிக்க வேண்டும்: ஜகி வாசுதேவ்

"சிறைகளில் கலை மற்று கலாசார அம்சங்களை ஊக்குவிப்பதன் மூலம் அங்கு மென்மையான சூழலை உருவாக்கி சிறை கைதிகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்" என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்தியில், "சிறைக் கைதிகள் மற்றும் காவல் துறையினர் தற்கொலை செய்துகொள்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவுடன் இந்திய அளவில் உயர் பொறுப்பில் இருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்துரையாடினர்.

அந்தக் கலந்துரையாடலில் ஜகி வாசுதேவ் பேசுகையில், "உங்கள் சொந்த புத்திசாலித்தனமே உங்களுக்கு எதிராக செயல்படும் மிக மோசமான நிலையே தற்கொலை ஆகும். ஆகவே, உலகில் உயிர் வாழ்வதுதான் உச்சப்பட்ச மதிப்பான செயல் என்பதை உணரும் சமூகத்தையும் கலாசாரத்தையும் நாம் உருவாக்க வேண்டும். மனிதர்களின் உள் அனுபவமானது வெளியில் இருந்து சேகரித்த விஷயங்களில் அடிமையாகாமல், வாழ்வின் அடிப்படை அம்சங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். இதற்கு யோக பயிற்சிகள் உங்களுக்கு உதவி புரியும்.

யோகா மூலம் ஒருவர் தனக்குள் மகிழ்ச்சிக்கான வேதியியல் மாற்றங்களை தானே உருவாக்கி கொள்ள முடியும். இது சமூகம் கட்டமைத்துள்ள வெற்றி கோட்பாடுகள் அல்லது மதிப்பீடுகளுக்குள் சிக்கி உணர்ச்சி சமநிலையை இழக்காமல் அவர்களை பாதுகாக்கும்.

நாட்டில் இருக்கும் சட்டங்கள் மூலம் சட்டத்தை மீறுபவர்களை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அவர்களுக்குள் உள்நிலை மாற்றத்தை உருவாக்க முடியாது. ஆனால், யோக பயிற்சிகள் மூலம் ஒருவர் தான் விரும்பும் உணர்வை தனக்குள் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இதை சாத்தியப்படுத்த சிறை கைதிகள் மற்றும் அதிகாரிகள், சட்ட அமலாக்க துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு தேசிய அளவில் யோகா வகுப்புகளை நடத்த ஈஷா தயாராக உள்ளது. இது தவிர, சிறைகளில் கலை மற்று கலாசார அம்சங்களை ஊக்குவிப்பதன் மூலம் அங்கு மென்மையான சூழலை உருவாக்கி சிறை கைதிகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்" என்றார் ஜகி வாசுதேவ்.

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு போபாலில் உள்ள மத்திய காவலர் பயிற்சி மையம் (Central Academy for Police Training) மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Bureau of Police Research and Development) சார்பில் இந்தக் கலந்துரையாடல் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது.

சிறைவாசிகளின் நலனுக்காக, ஈஷா சார்பில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தமிழக சிறைகளில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது" என்று ஈஷா அறக்கட்டளை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com