தற்காலி‌க ஆசிரியர்களால் பள்ளியை நடத்த வேண்டும் : ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின் எதிரொலி

தற்காலி‌க ஆசிரியர்களால் பள்ளியை நடத்த வேண்டும் : ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின் எதிரொலி

தற்காலி‌க ஆசிரியர்களால் பள்ளியை நடத்த வேண்டும் : ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின் எதிரொலி
Published on

ஜாக்டோ‌-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் தற்காலி‌க  ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பள்ளிகள் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் நாகை  மாவட்டத்திலுள்ள 19 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் அமுதா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஆசிரியர் சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டங்களால் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்‌கப்பட்டுள்ளது. அதனால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை தொடர்ந்து நடத்திட, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பயில்பவர்களை அருகிலுள்ள பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரிந்திட உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், வட்டாரக்கல்வி அலுவலர்கள் இது தொடர்பாக அணுகும் போது ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் அந்த சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களை‌‌, அரசு ப‌ள்ளிக்கு அனுப்ப வேண்டாம் எ‌ன‌ தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com