சென்னையில் ஐடிஐ மாணவர் படுகொலை: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சென்னையில் ஐடிஐ மாணவர் படுகொலை: சிசிடிவி காட்சிகள் வெளியீடு
சென்னையில் ஐடிஐ மாணவர் படுகொலை: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சென்னையில் ஐடிஐ மாணவர் நள்ளிரவில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன.

நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியிலிருந்து வள்ளுவர்கோட்டம் செல்லும் குளக்கரை சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஐடிஐ மாணவர் ரஞ்சித் என்று தெரிய வந்தது. அவர் காதல் விவகா‌ரம் காரண‌மாகக் கொலை ‌செய்யப்பட்டாரா, வேறு ஏதாவது காரணம் உள்ளதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

2 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் ஐடிஐ மாணவர் நள்ளிரவில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், இளைஞர் கையை கழுத்தில் வைத்து பிடித்துக் கொண்டே ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com