“தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை” - இந்திய வானிலை ஆய்வு மையம்

“தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை” - இந்திய வானிலை ஆய்வு மையம்
“தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை” - இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த 4 - 5 நாட்களில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சில இடங்களில் பகலில் வெயிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில், இலங்கையை ஒட்டிய பகுதியில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி தென்மேற்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக  ஒரிரு நாட்களில் மாறும் அடுத்த 4 - 5 நாட்களில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே கடலுக்குச் சென்ற மீனவர்கள் 6ம் தேதிக்குள் கரை திரும்பவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com