விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் வருமானவரி சோதனை

விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் வருமானவரி சோதனை

விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் வருமானவரி சோதனை
Published on

புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். கடந்த மாதம் ஏப்ரல் 7 ஆம் தேதி விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது சிக்கிய நகைகள் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யாவிற்கு சம்மன் அனுப்பி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் நடக்கும் வருமானவரி சோதனையால் அவருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com