திவாகரனுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நிறைவு

திவாகரனுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நிறைவு

திவாகரனுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நிறைவு
Published on

திருவாரூரில் திவாகரனுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை முடிந்துள்ளது. 

திவாகரனின் கல்லூரி, வீடு , அலுவலகம் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 9 ம் தேதி தொடங்கிய சோதனை இன்று அதிகாலை வரை நீடித்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் திவாகரனிடம் பல கட்ட விசாரணை நடத்தினர். சுந்தரக்கோட்டையில் திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றை மூன்று கார்களில் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கோடநாடு கர்சன் எஸ்டேட்டில் 4வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் தொலைபேசியில் கூட பேச முடியாததால் அவரது உறவினர்கள் கோடநாடு எஸ்டேட்டில் காத்திருக்கின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com