'ஆதாயம் தேடி வருபவர்கள் அது கிடைக்காத போது விலகுவது இயல்புதான்' - கவிஞர் சினேகன்

'ஆதாயம் தேடி வருபவர்கள் அது கிடைக்காத போது விலகுவது இயல்புதான்' - கவிஞர் சினேகன்
'ஆதாயம் தேடி வருபவர்கள் அது கிடைக்காத போது விலகுவது இயல்புதான்' - கவிஞர் சினேகன்

ஆதாயத்தை மட்டுமே எதிர்நோக்கி வரும் நபர்கள் ஆதாயம் கிடைக்காத போது கட்சியில் இருந்து விலகுவது இயல்புதான் என்று மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் சினேகன் தெரிவித்துள்ளார்.

சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு கடந்த 5ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு நாளான இன்று மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் கவிஞர் சினேகன் பங்கேற்றார்.

இதில், பீகாரை பின்பற்றி தமிழகத்திலும் மதுவிலக்கு கொண்டு வரவேண்டும், சுற்றுச்சூழல் கெடாத வகையில் நாடெங்கிலும் நதிகள் இணைப்பு அவசியம் வேண்டும் என்பன உள்ளிட்ட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் சினேகன் கூறும்போது,

மதுவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசு விவசாயிகளின் நலனுக்காக விவசாய சங்கங்கள் சார்பில் நடைபெற்று வரும் மாநாட்டில் போடப்பட்டுள்ள 29 தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கிராமம் கிராமமாக மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரதிநிதிகளை நியமித்து வருகிறோம். அடுத்த தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் வீரியம் அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கொடுக்கும் குரலை விட மக்கள் நீதி மையத்தின் குரல் தான் அதிகம் ஒலிக்கிறது.

மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதாயத்தை மட்டுமே எதிர்நோக்கி வரும் நபர்கள் ஆதாயம் கிடைக்காத போது கட்சியில் இருந்து விலகுவது இயல்புதான்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com