அதே போல மத்திய, மாநில அரசுகள் நிலைமையைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளன. ஆனால் இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் நோயின் தீவிரம் தெரியாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஆங்காங்கே பொறுப்பற்று சுற்றித் திரிந்து வருகின்றனர். அப்படி தடையை மீறி வெளியே வருபவர்களை காவல்துறையினர் எச்சரித்தும், அறிவுரைகள் வழங்கியும் அனுப்பி வருகின்றனர்.