”கலவரம் பரவி விடக்கூடாது” - கடலூர் மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு

”கலவரம் பரவி விடக்கூடாது” - கடலூர் மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு
”கலவரம் பரவி விடக்கூடாது” - கடலூர் மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு

புதுவை மாநில கலவரம் கடலூரில் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கையாக கடலூரில் கடலிலும் கரையிலும் மீனவப் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் கடல் பகுதியில் கரை பகுதியில் அதிகளவு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று புதுவை மாநிலத்தில் சுருக்குமடி வலை சம்பந்தமாக மீனவ கிராமங்களுக்கு இடையே மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து தற்போது அந்த கிராமங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் அந்தக் கலவரம் பரவி விடக்கூடாது என்பதாலும், மீனவர்களிடம் மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தின் அடிப்படையிலும் முன்னெச்சரிக்கையாக போலீசார் கடலிலும் கரையிலும் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாக தமிழகத்தில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் அமல்படுத்தப்பட்டு, அதுவும் தொடர்ந்து மீனவ பகுதியில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தினால் காவல்துறை முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலிலும் கரையிலும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com