உதயநிதியிடம் 300 வென்டிலேட்டர்கள், 18 லட்சம் மாஸ்குகளை வழங்கிய ஈஷா அறக்கட்டளை

உதயநிதியிடம் 300 வென்டிலேட்டர்கள், 18 லட்சம் மாஸ்குகளை வழங்கிய ஈஷா அறக்கட்டளை
உதயநிதியிடம் 300 வென்டிலேட்டர்கள், 18 லட்சம் மாஸ்குகளை வழங்கிய ஈஷா அறக்கட்டளை

ஈஷா சார்பில் தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக 300 வென்டிலேட்டர்கள், 18 லட்சம் கே.என்.95 முகக்கவசங்களை திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலினிடம் ஈஷா அறக்கட்டளை வழங்கியது.

இதுதொடர்பாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஆதரவு அளித்து உறுதுணையாக செயல்படும் விதமாக 300 உயர்தர வென்டிலேட்டர்கள், 18 லட்சம் கே.என்.95 முகக்கவசங்களை Isha Outreach - Covid Action வழங்கினோம்.

இதற்கு முன்பு, இதேபோல் கடந்த மே மாதம், 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், பி.பி.இ கிட்கள் மற்றும் முகக்கவசங்கள் உள்ளிட்ட பொருட்களை தமிழக அரசுக்கு வழங்கியிருக்கிறோம்.

இது தவிர, 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கொரோனா நிவாரணப் பணிகளை ஈஷா நேரடியாக செய்து வருகிறது. கோவையில் உள்ள பல்வேறு கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குவது மற்றும் மருத்துவம், சுகாதாரம், காவல்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த முன்களப் பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

மேலும், பல்வேறு மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. ஈஷாவின் பராமரிப்பின் கீழ் இயங்கும் 18 மின் மயானங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் இலவசமாக தகனம் செய்யப்படுகிறது. அத்துடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக 'சிம்ம க்ரியா' போன்ற எளிய யோகா பயிற்சிகளை உலகில் உள்ள பல லட்சம் மக்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளது" என்று ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com