மெடிக்கலில் வாங்கிய மாத்திரையில் இரும்புக்கம்பி - வாடிக்கையாளர் அதிர்ச்சி 

மெடிக்கலில் வாங்கிய மாத்திரையில் இரும்புக்கம்பி - வாடிக்கையாளர் அதிர்ச்சி 
மெடிக்கலில் வாங்கிய மாத்திரையில் இரும்புக்கம்பி - வாடிக்கையாளர் அதிர்ச்சி 

கோவையில் மெடிக்கலில் வாங்கிய மாத்திரையில் இரும்புக்கம்பி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை கரும்புகடை பகுதியியை சேர்ந்தவர் முஸ்தபா. இவர் பல் வலி காரணாமாக அருகில் உள்ள மெடிக்கலில் மாத்திரை வாங்கியுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பிய முஸ்தபா மாத்திரையை உட்கொள்ள கவரை பிரித்தபோது மாத்திரையில் இரும்புக்கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். 

இதுகுறித்து மெடிக்கல் உரிமையாளரிடம் அவர் புகார் தெரிவித்தார். ஆனால் மாத்திரையின் கவரில் அரசு அங்கீகார சீலிடப்பட்டுள்ளது. எனவே இந்த மாத்திரியை தயார்செய்த ரேக்சம் பயோடெக் பிரைவேட் லிமிடேட் என்ற நிறுவனம்தான் பொறுப்பு எனவும் மெடிக்கல் உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து வாடிக்கையாளர் சுகாதாரத்துறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com