ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு?

ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு?
ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு?

சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்றன.

நேற்றைய போட்டியின் போது வீரர்களை அழைத்து வருவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் சிரமங்கள் ஏற்பட்டன. போட்டியின் போது மைதானத்தின் உள்ளே காலணி வீச்சு சம்பவமும் நடைபெற்றது. இந்த சிரமங்களை கணக்கில் கொண்டு போட்டிகளை மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று தொடங்கவிருந்த அடுத்த போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் இன்னும் தொடங்கவில்லை. 

இதனிடையே, ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற ஆலோசனை நடத்தி வருவதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. மாற்றப்படும் போட்டிகள் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், கொச்சிக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com