சென்னையில் நாளை தொடங்கும் சர்வதேச விமான சேவை

சென்னையில் நாளை தொடங்கும் சர்வதேச விமான சேவை

சென்னையில் நாளை தொடங்கும் சர்வதேச விமான சேவை
Published on

சென்னையில் நாளை முதல் சர்வதேச விமான சேவை தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் நாள்தோறும் புதிய தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று தமிழகத்தில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் 25 உள்நாட்டு விமானங்கள் வெளி மாநிலங்களிலிருந்து இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் நாளை முதல் சென்னையிலிருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9.25 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு இயக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து மொத்தம் 40 விமானங்கள் வருகை மற்றும் புறப்பாட்டிற்கு இயக்கப்பட உள்ளன. இதற்கிடையே காலை 5.05 மணிக்கு முதல் விமானமாக ஏர் இந்தியா அந்தமான் செல்கிறது. இவை சிறப்பு விமானங்கள் இல்லை எனவும், வழக்கமான பயணிகள் சேவை தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com