”தேதியை அறிக்கும்வரை கைவிடப்போவதில்லை”-சென்னையில் 4வது நாளாக தொடரும்ஆசிரியர்கள் உண்ணாவிரதப்போராட்டம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் 4 ஆவது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் 4 வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம வேலைக்கு சம ஊதியம்
சம வேலைக்கு சம ஊதியம் புதிய தலைமுறை

கடந்த 28 ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமானது தொடங்கப்பட்டது. போராடுபவர்களில் ஒற்றை கோரிக்கை என்பது சம வேலைக்கு, சம ஊதியம் என்பததான்.

பள்ளி கல்வித்துறை தொடக்க கல்வி துறையில் பணியாற்ற கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கு 2009 மே மாதத்திற்கு முன்னால் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒரு ஊதிய விகிதமும் அதற்கு பின்னால் பணியில் சேர்ந்தவர்களுக்கு மற்றொரு ஊதிய விகிதமும் பின்பற்றப்படுகின்றது என்பது தான் இப்போராட்டத்திற்கு காரணம்.

சம வேலைக்கு சம ஊதியம்
சம வேலைக்கு சம ஊதியம் புதிய தலைமுறை

”சம வேலை செய்யும் எங்களுக்கு சம ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக இருக்கின்றது” என்ற கோரிக்கைதான் இவர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து வைக்கப்பட்டது. இதற்காக 4 வது நாளாக போராட்டத்தை நடத்திவருகின்றனர்.

போராட்ட களத்தில் இருக்கிற ஆசிரியர்களில் பல அசிரியர்களுக்கு உடல் நல பாதிப்பு என்பது ஏற்பட்டு வருகின்றது. இதனால் 150 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நல குறைவு காரணமாக ஆம்புலம்ஸ்கள் மூலமாக மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இன்றைய நிலையில் போராட்ட கலத்திலேயே சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகின்றது. ஏனென்றால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருவதே இதற்கு வருவதே காரணமாக இருக்கின்றது.

இதனை தொடர்ந்து அரசு தரப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்த உடன்பாடும் இல்லை ஆசிரியர்கள் தெரிவித்தார்கள்.

திரு.ராபர்ட்
திரு.ராபர்ட் புதிய தலைமுறை

எனவே இது குறித்து இப்போராட்டத்தில் பொதுசெயலாளர் ராபர்ட் என்பவர் இது குறித்து கூறுகையில், “இது இன்று நேற்று என்று உருவான பிரச்னை அல்ல, 14 ஆண்டுகளாக நடைபெறும் ஒரு பிரச்சனை.கடந்த 2018 ஆம் ஆண்டு மு.க ஸ்டாலின் அவர்கள் இதே களத்திற்கு வந்து ’சம வேலைக்கு சம ஊதியம் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே வழங்கப்படும்” என்று அறிவித்து இருந்தார்.இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாங்கள் எதிர்ப்பாத்து காத்திருந்தோம் . ஆனால் 20 மாதங்கள் ஆகியும் எதுவும் நடக்காததால் கடந்த டிசம்பர் மாதம் நாங்கள் போராட்டத்தை தொடங்கினோம்.

1.1.2023 இந்த புத்தாண்டின் முதல் அறிவிப்பே இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண் பிரச்சனை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார். ஆனால் 3 மாதங்காளில் முடியும் என்று கூறியது இப்பொழுது 10 மாதங்கள் ஆகியும் எங்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் எட்டப்படவில்லை. மீண்டும் எங்களுக்கு இன்று நடந்த பேச்சு வார்த்தையில் ”எங்களுக்கு கால அவகாசம் தேவை ”என்று அறிவித்தார்கள்.

அதற்கு எங்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டது என்னவென்றால் நாங்கள் கால அவகாசம் தர தாயாராக இருக்கிறோம். ஆனால் எந்த தேதியில் இருந்து எங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற தேதியை அறிக்கையாக வெளியிட்டால் நாங்கள் எங்கள் போராட்டத்தை கலைத்து கொள்கிறோம். மேலும் ’எண்ணும் எழுத்தும் திட்டத்த’ சரியாக கற்பிப்பது நீங்கள் தான் என்று எங்களை பாராட்டினார்கள். எனவே உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று கூறினார்கள். நாங்களும், எப்பொழுது வேண்டுமானாலும் பணிக்கு திரும்ப தயார் , எங்கள் கோரிக்கையை எப்பொழுது நிறைவேற்றப்படும் என்ற அறிக்கையை மட்டும் முதல்வர் தாக்கல் செய்ய வேண்டும்.” என்று தெர்வித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com