கடந்த மாதத்தில் பெய்த கனமழையால் சென்னை நகரில் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நெகிழி கழிவுகள், கட்டுமானக் கழிவுகள் ஆங்காங்கே சேர்ந்தன. தண்ணீர் செல்ல ஏதுவாக மழைநீர் வடிகால் அடைப்புகள் நீக்கப்பட்ட நிலையில், நாளை முதல் 5 நாட்களுக்கு சென்னையில் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.