ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தேடும் பணி தீவிரம்: அமைச்சர் மஸ்தான் ஆய்வு

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தேடும் பணி தீவிரம்: அமைச்சர் மஸ்தான் ஆய்வு
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தேடும் பணி தீவிரம்: அமைச்சர் மஸ்தான் ஆய்வு

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை நான்காவது நாளாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த செவலபுரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறுவாடி கிராமத்துக்குச் செல்லும் தரைப்பாலத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் சிவகுமார் (35) என்பவரை தேடும் பணி நான்காவது நாளாக நீடித்து வருகிறது.

காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் கடந்த 3 நாட்களாக தீவிரமாக தேடி வரும் நிலையில், தேடுதல் பணியை துரிதப்படுத்த, தமிழக சிறுபான்மையினர் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான் சம்பவ இடத்திற்குச் சென்று தேடுதல் பணி குறித்து ஆலோசனை மேற்கொண்டார்

3 நாட்களாக ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் மீட்கப்படாததால் அக்கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகிறனர். இதையடுத்து கிராம மக்களிடமும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடமும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆறுதல் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com