டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விலைப்பட்டியல் வைத்து ரசீது வழங்க அறிவுறுத்தல்

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விலைப்பட்டியல் வைத்து ரசீது வழங்க அறிவுறுத்தல்
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விலைப்பட்டியல் வைத்து ரசீது வழங்க அறிவுறுத்தல்

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கவும், வாடிக்கையாளர்களுக்கு ரசீது வழங்கவும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும் வாடிக்கையாளர்களின் பார்வையில் படும்படி மது வகைகளின் விலைப்பட்டியலை வைத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார். மதுவிற்கான உரிய பற்றுச்சீட்டு ரசீது வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை மாவட்ட மேலாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடைப் ணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதே போல் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் மொத்த விற்பனை செய்ய கூடாது என்றும் அவ்வாறு செய்யும் கடை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com