“மேகக்கூட்டத்தில் நுழைந்ததால் பிபின் ராவத்தின் ஹெலிகாப்டர் விபத்து” - விசாரணை அறிக்கை

“மேகக்கூட்டத்தில் நுழைந்ததால் பிபின் ராவத்தின் ஹெலிகாப்டர் விபத்து” - விசாரணை அறிக்கை
“மேகக்கூட்டத்தில் நுழைந்ததால் பிபின் ராவத்தின் ஹெலிகாப்டர் விபத்து” - விசாரணை அறிக்கை

திடீர் என உருவான மேகக்கூட்டங்களுக்குள் நுழைந்ததால் தலைமை தளபதியின் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் அருகே டிசம்பர் 8ம் தேதி முப்படைத்தளபதிகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரழந்தனர். இந்நிலையில், இந்த விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையில், திடீர் என உருவான மேகக்கூட்டங்களுக்குள் நுழைந்ததால் தலைமை தளபதியின் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ''காட்டேரி பள்ளத்தாக்கில் திடீரென குறுக்கிட்ட மேகக்கூட்டங்களுக்குள் ஹெலிகாப்டர் நுழைந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம்.

முப்படைகளின் தலைமை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் கவனக்குறைவோ, இயந்திர கோளாறோ இல்லை. ஹெலிகாப்டர் விபத்தில் எவ்வித சதி செயலும் இல்லை. எதிர்ப்பாராவிதமாக ஏற்பட்ட வானிலை மாற்றமும், திடீரென உருவான மேகக்கூட்டங்களுமே விபத்திற்கு காரணம்'' என்று முப்படைகளின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com