சாயல்குடியில் சுயேச்சை வேட்பாளரை மற்ற வேட்பாளர்கள் கொலை மிரட்டல் விடுவதாக கூறி செல்போன் டவரில் ஏறி சுயேட்சை வேட்பாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் 1-வது வார்டில் சரவணமூர்த்தி உட்பட நான்கு நபர்கள் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் தமக்கு மற்ற வேட்பாளர்கள் கொலை மிரட்டல் விடுவதாக கூறி சரவணமூர்த்தி செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்று உள்ளார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாயல்குடி போலீசார் அவரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் சுயேச்சை வேட்பாளர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது. பின்னர் போலீசார் தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற சுயேட்சை வேட்பாளருக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.