முல்லை பெரியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு நீர்திறப்பு அதிகரிப்பு

முல்லை பெரியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு நீர்திறப்பு அதிகரிப்பு
முல்லை பெரியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு நீர்திறப்பு அதிகரிப்பு

முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு நீர்த்திறப்பு 2 ஆயிரத்து 974 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் கடந்த 29ஆம் தேதி 136 அடியை தாண்டியதால் தமிழ்நாட்டிற்கு நீர்த்திறப்பு விநாடிக்கு 2 ஆயிரத்து 350 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மேலும் கேரளாவிற்கு திறக்கப்படும் 13 மதகுகளில் முதலில் 2 மதகுகளும், அடுத்ததாக ஒரு மதகும் திறக்கப்பட்டு விநாடிக்கு ஆயிரத்து 675 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், அணையின் நீர்மட்டம் 139 அடியை நெருங்கும் நிலையில், மேலும் 3 மதகுகள் என மொத்தம் 6 மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவுக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு 2 ஆயிரத்து 974 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு 2 ஆயிரத்து 350 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com