பிரபல ஜவுளி நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் உட்பட தமிழகம் முழுவதும் 70 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துரையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ், ஜி ஸ்கொயர், லோட்டஸ் நிறுவனங்கள், ரேவதி குழுமம் போன்ற இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிரபல துணிக்கடை நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரின் கடைகள், வீடு, அலுவலகம்,கெஸ்ட்ஹவுஸ் போன்ற இடங்களிலும், ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் வீடு மற்றும் அலுவலகங்களிலும், ரேவதி குழுமத்தின் பல்வேறு கடைகள் மற்றும் வீடுகளில் காலை 7 மணிமுதல் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை முழுவதும் 72 இடத்திலும், கோவையில் 2 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
\
வரி ஏய்ப்புப் புகாரில் 1000திற்கும் அதிகமான அதிகாரிகள் ஒரே நேரத்தில் இந்தச் சோதனையை நடந்து வருகின்றனர். மேலும் சென்னையில் பாடி, தியாகராய நகர், ஆழ்வார்பேட்டை போன்ற இடங்களில் உள்ள உரிமையாளர்களின் வீடு, அலுவலகம் போன்ற இடங்களிலும் அந்த நிறுவனகளின் செயல் அதிகாரி, மேலாளர் போன்றவர்களின் வீடுகளிளும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக தமிழகம் முழுவதும் 32 இடங்களில் கடந்த 3 ஆம் தேதி சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட பிரபல ஹோட்டல்களிலும் கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட் ஆகிய நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதன்தொடர்சியாக தற்போது தமிழகத்தில் 74 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.