தமிழ்நாடு
சென்னை: புரவங்கரா நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
சென்னையில் புரவங்கரா ப்ராவிடண்ட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்துவருகிறது. வரிக்கணக்கு தாக்கல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை செய்துவருகின்றனர்.
சென்னை, பெங்களூர், புனே, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புரவங்கரா ப்ராவிடண்ட் நிறுவனம் உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நிலங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள புரவங்கரா ப்ராவிடண்ட் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை இன்று காலை முதலே நடந்துவருகிறது. வரிக்கணக்கு தாக்கல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை செய்துவருகின்றனர். சோதனை குறித்தான முழுவிபரங்களும் செய்தியில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ளது.