அன்புச்செழியன் வீட்டில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத ரொக்கப் பணம்.. வங்கியில் ஒப்படைப்பு

அன்புச்செழியன் வீட்டில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத ரொக்கப் பணம்.. வங்கியில் ஒப்படைப்பு
அன்புச்செழியன் வீட்டில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத ரொக்கப் பணம்.. வங்கியில் ஒப்படைப்பு

அன்புச்செழியனுக்கு சொந்தமான மதுரை வீட்டில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது.

மதுரையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான மதுரை காமராஜர் சாலையில் உள்ள வீட்டில் கடந்த 2ம் தேதி காலை 6 மணிக்கு துவங்கிய வருமான வரித்துறை சோதனை சோதனை இன்று நிறைவடைந்தது. அன்புச்செழியன் வீட்டில் இருந்து சூட்கேஸ் மற்றும் பேக்கிகளில் முக்கியமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அன்புச் செழியன் வீட்டில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணங்கள் மதுரை பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

அன்புச்செழியனுக்கு சொந்தமான மேலும் சில இடங்களில் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள அன்புச்செழியனின் சகோதரர் அழகர்சாமி வீட்டில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகின்றது. மேலும் அன்புச்செழியனுக்கு சொந்தமான சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் தொடர்ச்சியாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: சோகத்தில் முடிந்த ஐ.டி. இளைஞரின் லட்சியப் பயணம் - பாதியிலேயே கலைந்த குமரி டூ காஷ்மீர் கனவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com