கல்கி ஆசிரமம் ரூ.500 கோடி வரிஏய்ப்பு - வருமான வரித்துறை

கல்கி ஆசிரமம் ரூ.500 கோடி வரிஏய்ப்பு - வருமான வரித்துறை
கல்கி ஆசிரமம் ரூ.500 கோடி வரிஏய்ப்பு - வருமான வரித்துறை

கல்கி ஆசிரமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.500 கோடி வரிஏய்ப்பு செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

கல்கி ஆசிரமம் மற்றும் கல்கி பாபாவிற்கு சொந்தமான 40 இடங்களில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத ரூ.500 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.43.9 கோடியும், ரூ.18 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலரும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் ரூ.22 கோடி மதிப்புள்ள 33 கிலோ தங்கமும், ரூ.5 கோடி மதிப்புள்ள வைரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com