காஞ்சிபுரம்: சாய்ந்து நிற்கும் மின்கம்பம்; நிமிட இடைவெளியில் இரு விபத்துக்கள்

காஞ்சிபுரம்: சாய்ந்து நிற்கும் மின்கம்பம்; நிமிட இடைவெளியில் இரு விபத்துக்கள்
காஞ்சிபுரம்: சாய்ந்து நிற்கும் மின்கம்பம்; நிமிட இடைவெளியில் இரு விபத்துக்கள்

காஞ்சிபுரத்தில் ஒரே இடத்தில் இரு வேறுவிபத்துகள் நிகழ்ந்துள்ளது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் சாலை பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் பிரதான சாலை என்பதனால் எப்பொழுதும் வாகன ஓட்டிகள் அதிக அளவில் காணப்படுவார்கள். இந்நிலையில் வையாவூர் சாலையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென சாலையின் வலது பக்கம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் செல்ல முற்படும்போது அவரின் பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் அந்த நபர் தனது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி சாலையில் விழுந்தார். இதில் அந்த நபருக்கு லேசான காயம் அடைந்தார்.

இந்த விபத்து அங்கே இருக்கக்கூடிய சிசிடிவி காட்சியில் பதிவானது இந்த விபத்து நடந்து முடிந்த சிறிது நேரத்திலேயே குறிப்பிட்ட அதே இடத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது கண்மூடித்தனமாக வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் சைக்கிளில் மோதி இருவரும் சாலையில் கீழே விழுந்தனர் இதில் முதியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குறிப்பிட்ட அந்த இடத்தில் மின்சார கம்பம் காற்றினால் சற்று சாய்ந்த நிலையில் இருப்பதனால் வாகன ஓட்டிகளுக்கு மின்சார கம்பம் சாய்வது போல் ஒரு பிம்பம் ஏற்படுவதாக கூறப்படுகிறது இதன் காரணமாக நிலைதடுமாறி ஒருவர் பின் ஒருவராக குறிப்பிட்ட அந்த இடத்தில் சாலை விபத்தில் சிக்கி கொள்கிறார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்
    

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com