ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் ஏ.ஆர்.ரகுமான் கச்சேரி !

ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் ஏ.ஆர்.ரகுமான் கச்சேரி !
ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் ஏ.ஆர்.ரகுமான் கச்சேரி !

கோவையில் இந்தாண்டு நடைபெறவுள்ள ஈஷா மஹா சிவராத்திரி விழாவில், இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி நடைபெறவுள்ளது.

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். இதில் இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பறைச்சாற்றும் வகையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைசிறந்த கலைஞர்களின் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டு மஹா சிவராத்திரி விழா வரும் மார்ச் 4-ம் தேதி 112 அடி ஆதியோகி சிலை மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இவ்விழா மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும். இதில் நள்ளிரவு தியானம் மற்றும் இசை கச்சேரிகள் இடம்பெற உள்ளன. குறிப்பாக, ‘ஆஸ்கர்’ விருது வென்ற ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி நடைபெற உள்ளது. இதுதவிர, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். விழாவுக்கு வரும் அனைத்து மக்களுக்கும் ஈஷா யோகா மையம் சார்பில் அன்னதானம் வழங்கப்படும். 2017-ம் ஆண்டு மஹா சிவராத்திரி விழாவின் போது, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ஆதியோகி திருவுருவத்தை திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com