மெழுகுவர்த்தியில் தேச தலைவர்கள்..!

மெழுகுவர்த்தியில் தேச தலைவர்கள்..!
மெழுகுவர்த்தியில் தேச தலைவர்கள்..!

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையை சேர்ந்த நபர், மெழுகு வர்த்தியில் தேசத் தலைவர்களின் உருவங்களை தத்ரூபமாக வரைந்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச்சேர்ந்தவர் யு.எம்.டி.ராஜா. இவர் தனியார் நிறுவனத்தில் தங்க நகை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.   இவர் மைக்ரோ அளவில் ஒவியம் வரைவதில் ஆர்வம் மிகுந்தவர். அவ்வப்பொழுது பல்வேறு உருவங்களை பல்வேறு பொருட்களில் தத்ரூபமாக வடிவமைத்து உள்ளார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு,தேசத் தலைவர்களின் உருவங்களை மூன்று மெழுகுவர்த்தியில் தத்ரூபமாக வடிவமைத்து இருந்தார்.காந்திஜி,நேரு,சுபாஷ் சந்திரபோஸ்,பகத்சிங்,அப்துல் கலாம் உள்ளிட்ட 12 தேசத் தலைவர்களின் உருவங்கள் அந்த மெழுகு வர்த்திகளில் இருந்தது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த மெழுகுவர்த்திகளை பள்ளிகளில் மாணவர்கள் பார்வையிடுவதற்காக வைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com