1953ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, இக்கோரிக்கையை ஏற்றதை அடுத்து, 1956ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களாக நாடு பிரிக்கப்பட்டது. அப்போது மெட்ராஸ் மாகாணத்தின் கீழ் இருந்த பகுதிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற மொழிகளின் அடிப்படையில் மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.