குறுக்கே வந்த நாய்.. திடீரென ப்ரேக் பிடித்த ஓட்டுநர் - தவறிவிழுந்து நடத்துநர் உயிரிழப்பு

குறுக்கே வந்த நாய்.. திடீரென ப்ரேக் பிடித்த ஓட்டுநர் - தவறிவிழுந்து நடத்துநர் உயிரிழப்பு

குறுக்கே வந்த நாய்.. திடீரென ப்ரேக் பிடித்த ஓட்டுநர் - தவறிவிழுந்து நடத்துநர் உயிரிழப்பு
Published on

சேலம் அருகே அரசுப் பேருந்து நடத்துநர் பேருந்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏற்காடு அடிவாரம் பகுதியை நோக்கி, அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை வீராசாமி புதூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் ஓட்டிச் சென்றார். நாமக்கல் மாவட்டம் அத்தனூர் ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (56) என்பவர் நடத்துநராக அந்தப் பேருந்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் சேலம் செட்டிசாவடி பகுதியில் சென்றுவிட்டு பேருந்து திரும்பும்போது, செட்டிசாவடி அருகே பசுவக்கல் பகுதியில் நாய் குறுக்கே வந்ததால் ஓட்டுநர் சீனிவாசன் திடீரென பிரேக் பிடித்து பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போது நிலை தடுமாறிய நடத்துநர் ராஜேந்திரன் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், ஆம்புலன்ஸ் வர தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்பதற்காக அடிபட்டு இருந்த ராஜேந்திரனை பேருந்திலேயே ஏற்றிக்கொண்டு, நடத்துநர் சீனிவாசன் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராஜேந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com