தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரை மதுக்கடைகளை மூட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் கிர்லோஷ் குமார் உத்தரவு.
கஜா புயல் நேற்று முன்தினம் அதிகாலை நாகை - வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இதனால் நாகை, வேதாரண்யம், பேராவூரணி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகள் பேரிதும் பாதிக்குப்புக்கு உள்ளாகியுள்ளன. கஜா புயலால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். அதோடு, தங்களது வாழ்வாதாரங்களை இழந்து வாடுகின்றனர்.
புயல் பாதித்த மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து மீட்புப் பணிகளை தமிழக அரசு முடக்கிவிட்டுள்ளது. குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், கஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர்,திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர் கிர்லோஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரை மதுக்கடைகளை திறக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.