"ரஜினி 1996 போலவே 'வாய்ஸ்' அரசியலில் ஈடுபடுவார்!" - ஆடிட்டர் குருமூர்த்தி கணிப்பு

"ரஜினி 1996 போலவே 'வாய்ஸ்' அரசியலில் ஈடுபடுவார்!" - ஆடிட்டர் குருமூர்த்தி கணிப்பு
"ரஜினி 1996 போலவே 'வாய்ஸ்' அரசியலில் ஈடுபடுவார்!" - ஆடிட்டர் குருமூர்த்தி கணிப்பு

அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ள ரஜினிகாந்த், 1996-ல் செய்ததுபோலவே தமிழகத்தில் வாய்ஸ் அரசியலில் ஈடுபடுவார் என்று மூத்த பத்திரிகையாளரான ஆடிட்டர் குருமூர்த்தி கணித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கருத்தில், "ரஜினிகாந்த் தனது உடல்நிலை காரணமாக எடுத்த முடிவு குறித்து என்னிடம் தெரிவித்திருந்தார். இது தவிர்க்க முடியாத முடிவு. ரஜினியின் அறிக்கையை கூர்ந்து கவனியுங்கள். 'தேர்தல் அரசியலுக்கு வராமல், தமிழக மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்யமுடியுமோ அதை நான் செய்வேன்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். என்னுடைய கணிப்பு இதுதான்: தமிழகத்தில் 1996-ல் செய்தது போன்றே ரஜினிகாந்த் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துவார்" என்று கூறியுள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் நடிகர் ரஜினிகாந்த் 1996-ம் ஆண்டு முதன்முதலாக குரல் கொடுத்தார். அன்று ஆட்சியில் இருந்த அதிமுக அரசுக்கு எதிராக அந்தக் குரலை அவர் பதிவு செய்தார். அப்போது, திமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. இந்தக் கூட்டணிக்கு ரஜினிகாந்த் தன் ஆதரவை பகிரங்கமாக தெரிவித்தார். அப்போது திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அது ரஜினியின் குரலுக்கு கிடைத்த முதல் அங்கீகாரமாகப் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com