கடலூர்: மதுப் பழக்கத்தை கைவிடாத கணவர்: 2 குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்த மனைவி

கடலூர்: மதுப் பழக்கத்தை கைவிடாத கணவர்: 2 குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்த மனைவி
கடலூர்: மதுப் பழக்கத்தை கைவிடாத கணவர்: 2 குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்த மனைவி
கடலூர் மாவட்டத்தில் கணவன் மது குடிக்கச் சென்ற விரக்தியில் மனைவி இரண்டு குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலடி அருகே உள்ள ப. எடக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த காய்கறி சந்தை கூலித் தொழிலாளியான பாக்யராஜ் மனைவி, மகள் மற்றும் மகள்களுடன் வசித்து வந்தார். மதுவிற்கு அடிமையாகி இருந்த பாக்கியராஜ், மனைவியின் வேண்டுதலை ஏற்று சில நாள் குடிப்பழக்கத்தை கைவிட்டிருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் பாக்யராஜ் மீண்டும் மது அருந்தப் போவதாகக் கூறி, கோபுராபுரம் கிராமத்திற்குச் சென்றுள்ளார். இதனால் விரக்தியடைந்த பாக்கியலட்சுமி, மகள் திவ்யா மற்றும் மகன் திவாகரன் ஆகிய மூவரும் தங்களது வயலில் இருந்த முந்திரி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சடலங்களைக் கைப்பற்றிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com