புதுக்கோட்டை: மண்ணெண்ணை விளக்கால் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு

புதுக்கோட்டை: மண்ணெண்ணை விளக்கால் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு
புதுக்கோட்டை: மண்ணெண்ணை விளக்கால் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மண்ணெண்ணை விளக்கால் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கெண்டையம்பட்டியை சேர்ந்தவர் சம்சுதீன் (34). அவரது மனைவி ரெஜினா பேகம் (28). இவர்கள் இருவருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சம்சுதீன் அவரது மனைவி ரெஜினா பேகம் மற்றும் குழந்தைகள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் எரிந்து கொண்டிருந்த மண்ணெண்ணை விளக்கு எதிர்பாராதவிதமாக ரெஜினா பேகம் மீது விழுந்து தீ விபத்து ஏற்பட்டது.

இதில் உடல் முழுவதும் தீக்காயம் பரவி ரெஜினா பேகம் துடி துடித்த போது இதை பார்த்த அவரது கணவர் சம்சுதீன் தனது மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவர் மீதும் தீ பரவியது. இதைபார்த்த மூன்று குழந்தைகளும் கதறியதையடுத்து அருகே இருந்தவர்கள் சம்சுதீன் மற்றும் ரெஜினா பேகம் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரெஜினா பேகம் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இன்று காலை (15.04.2021) அவரது கணவர் சம்சுதீனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளது. மேலும் இதுகுறித்து மழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com