\
பாலச்சந்திரன்
பாலச்சந்திரன்புதிய தலைமுறை

கரையை கடந்த மிக்ஜாம்.. முக்கிய தகவலை சொன்ன வானிலை ஆய்வுமைய தென்மண்டல இயக்குநர்!

மிக்ஜாம் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், அதுகுறித்து முக்கிய தகவல் ஒன்றை வானிலை ஆய்வுமைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Published on

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 36 மணிநேரத்திற்குத் தொடர்ச்சியாக பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இடைவிடாமல் மழை பெய்த சென்னையின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீரானது வீடுகளில் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நேற்று இரவு முதல் மழை குறைந்து இன்று காலை முதல் வெயில் அடிக்க துவங்கியுள்ளது. மழை நின்ற போதும் மக்கள் படும் துயரங்கள் நின்றபாடில்லை. அரசு தரப்பில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தபோதும் பல இடங்களில் தங்களுக்கு இன்னும் உதவிகள் கிடைக்கவில்லை என்று புகார்கள் எழுந்து வருகின்றன. பல இடங்களில் வீடுகள், கடைகள், சாலைகளை இன்னும் வெள்ளம் சூழ்ந்த வண்ணமே உள்ளன. வெள்ளநீர் மெல்ல மெல்ல வடிந்து வருகிறது. தன்னார்வலர்கள் பலரும் மீட்பு பணிகளில் உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர சென்னை தவிர பிற மாவட்டங்களும் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

மிக்ஜாம் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், அதுகுறித்து முக்கிய தகவல் ஒன்றை வானிலை ஆய்வுமைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதுகுறித்து இந்த வீடியோவில் காணவும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com