சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கு: ஜவாஹிருல்லாவுக்கு ஜாமீன்

சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கு: ஜவாஹிருல்லாவுக்கு ஜாமீன்
சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கு:  ஜவாஹிருல்லாவுக்கு ஜாமீன்

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றது தொடர்பான வழக்கில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஹவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 
இது தொடர்பான வழக்கு காலையில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் வழங்கிய காலஅவகாசம் முடிவடைந்த நிலையில், சரணடையாமல் வழக்கை எப்படி ந‌டத்த முடியும் என நீதிபதி சதீஷ்குமார் வினவினார். எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மதியத்திற்குள் சரணடைந்துவிட்டு, தகவல் தெரிவித்தால் மட்டுமே ஜாமீன் மீதான விசாரணை நடைபெறும் என நீதிபதி கூறினார். இதையடுத்து, ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அதனைத் தொடர்ந்து ஜவாஹிருல்லா தாக்கல் செய்த மனுவை ஏற்று, 5 பேருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அனுமதி பெறாமல், வெளிநாடுகளிலிருந்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, சையது நிஷார் உள்ளிட்ட 5 பேருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை, சென்னை மாவட்ட ஆறாவது கூடுதல் அம‌ர்வு நீதிமன்றம் கடந்த 16ஆம் தேதி உறுதி செய்தது. தண்டனையை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் ஜவாஹிருல்லா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து அவர்களுக்கு, ஒரு வாரத்திற்கு விலக்கு அளித்திருந்த உயர்நீதிமன்றம், தற்போது ஜாமீன் வழங்கியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com