பிரதமரை எதிர்த்து ஐஐடி மாணவர்கள் திடீர் போராட்டம்

பிரதமரை எதிர்த்து ஐஐடி மாணவர்கள் திடீர் போராட்டம்

பிரதமரை எதிர்த்து ஐஐடி மாணவர்கள் திடீர் போராட்டம்
Published on

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐஐடியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்னை ஐஐடி ஹெலிபேடிற்கு வந்தார். பிறகு கார் மூலம் அடையாறு புற்றுநோய் மையத்திற்கு அவர் சென்றார். 

அப்போது பிரதமர் சென்று கொண்டிருக்கும்போது ஐஐடி வளாகத்தில் நின்றிருந்த மாணவர்கள் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பிரதமரின் தமிழக வருகையை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கருப்புக் கொடியேந்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னையில் கிண்டி, விமான நிலையம், சின்னமலை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக பிரதமர் மோடி சாலை மார்க்கமாக செல்லாமல் ஐஐடி வளாகத்தில் ஹெலிபேட் அமைத்து அடையார் புற்றுநோய் மையத்திற்கு சென்றார். ஆனால், ஐஐடி வளாகத்திற்குள்ளேயே மாணவர்கள் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com