ப்ளூவேல் விளையாட்டை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு

ப்ளூவேல் விளையாட்டை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு

ப்ளூவேல் விளையாட்டை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்ற கல்லூரி மாணவர் ப்ளூவேல் விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு  ப்ளூவேல் விளையாட்டை பகிர்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்டனர். அத்துடன் ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இது தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் செப்டம்பர் 7-ந் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். ப்ளூவேல் விளையாட்டை தடை செய்வது தொடர்பாக சென்னை ஐஐடி இயக்குநர் ஆலோசனை வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com