திருவிழாக்களில் ஆபாச நடனம் இடம்பெற்றால் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்

திருவிழாக்களில் ஆபாச நடனம் இடம்பெற்றால் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்

திருவிழாக்களில் ஆபாச நடனம் இடம்பெற்றால் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்
Published on

கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனமோ, பாடல்களோ இடம்பெற்றால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி.-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் ஆபாச நடனங்கள் நடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. கோயில் திருவிழாக்களில் கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் தொன்றுதொட்டு நடைபெற்று வருவதால், அதற்கு அனுமதி வழங்கும்படி வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பெல்லாம் திருவிழாக்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக கூறினார். ஆனால் தற்போது அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக பல நடனங்கள் அறிமுகமாகியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். 

கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளை காவல்துறையினர் முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என்றும், அதில் ஆபாசம் ஏதும் இருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக டி.ஜி.பி.-க்கு நீதிபதி உத்தரவிட்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com