சிலைக்கடத்தல் வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் கைது

சிலைக்கடத்தல் வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் கைது
சிலைக்கடத்தல் வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் கைது

சிலைக்கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் துபாயிலிருந்து சென்னை வந்த போது விமான நிலையத்தில் சிக்கினார். 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் தானாக வந்து மாட்டியது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.

கடந்த 2016-ஆம் ஆண்டில் சிலைக்கடத்தல் புகாரில் தீனதயாளனும் அவரது கூட்டாளியான புதுச்சேரி தொழில் அதிபர் புஷ்பராஜனும் கைது செய்யப்பட்டனர். தீனதயாளனின் வீடு மற்றும் கிடங்கிலிருந்து ஏராளமான சிலைகள் கைப்பற்றப்பட்டன. தன் பங்குக்கு 14 சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறினார் புஷ்பராஜன். புதுச்சேரியைச் சேர்ந்த மரிய தெரசா என்பவரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அந்தச் சிலைகளை கொடுத்து வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து உடனடியாக களமிறங்கிய சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு, புதுச்சேரியிலுள்ள மரிய தெரசா வீட்டை சோதனையிட்டது. அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான காவல்துறையினர் நடத்திய ஆய்வில் கட்டிலுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 பழங்கால சாமி சிலைகள் சிக்கின. எஞ்சிய 3 சிலைகளோடு சேர்த்து மரிய தெரசாவையும், அவரது கணவர் விஜய்யையும் காணவில்லை.

பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற மரிய தெரசாவும் விஜயும் பிரான்ஸ் நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். 11 பழங்கால சிலைகளையும் கைப்பற்றிய காவல்துறையினர் மரிய தெரசாவின் மேலாளரை கைது செய்தனர். தப்பியோடிவர்கள் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைந்தால் அவர்களைப் பிடிப்பதற்காக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. எனினும் காவல்துறையின் முயற்சிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்பே பலன் கிடைத்துள்ளது.

துபாயிலிருந்து சென்னைக்கு வந்த மரிய தெரசா குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டார். அவர் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். 3 ஆண்டுகளுக்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை புதுப்பித்திருக்க மாட்டார்கள் என நினைத்து இந்தியாவுக்கு வந்துள்ளார் மரிய தெரசா என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com