சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்பு

சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்பு

சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்பு
Published on

சென்னையில் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கழிவறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரப்பதிவுத் துறை ஐஜி சிவன் அருள், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். காலை கழிவறைக்கு சென்ற அவரது மனைவி சுமதி வெளியேவர நீண்ட நேரமான நிலையில், வீட்டு பணிப்பெண் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அங்கு சென்ற காவல்துறையினர் கதவை உடைத்து பார்த்தப்போது, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சுமதி பிணமாக கிடந்துள்ளார். அவரின் கையில் ரத்தக்கறை படிந்த பிளேடு ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலைக்கான கடிதமும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 6 மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்த சுமதி அதற்கான சிகிச்சைகளை எடுத்து வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com