தமிழ்நாடு
சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி நியமனம்
சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி நியமனம்
சென்னையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிஜஜி புவனேஷ்வரி புறநகர் பகுதிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் கொரோனா தடுப்புக்கு உதவ மண்டல வாரியாக 5 ஐபிஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஐபிஎஸ் அதிகாரிகள் மகேஷ்குமார் அகர்வால், ஆபாஷ் குமார், அமரேஷ் புஜாரி, அபய்குமார் சிங் மற்றும் பவானீஸ்வரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.