\
அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் - ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் 

அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் - ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் 

அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் - ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம் 
Published on

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு சார்பில் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

அரசாணைப்படி கூடுதல் ஊதியத்தை உயர்த்தி வழங்குதல் உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவரகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு உள்ளிட்டவை கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. 

இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு சார்பில் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரசு சார்பில் கோரிக்கைகளை பரிசீலிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி செந்தில்ராஜை நியமித்து சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com