லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அவருக்கு தொடர்புடைய 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதனை தெரிவித்துள்ளார்.
“பொதுவாழ்க்கையில் பயணிக்கும் நாங்கள் இது போன்ற சோதனையை சந்திக்க தயாராக உள்ளோம். இந்த சோதனையில் என் இல்லத்தில் ஆவணங்களோ, பணமோ, நகையோ பறிமுதல் செய்யப்படவில்லை. சோதனைக்கு முழு ஒத்துழைப்பை நான் கொடுத்தே.
அதே போல கல்வி நிறுவனங்களை தொடங்கி பல ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போது தொடங்கியதை போல சொல்கிறார்கள். சட்ட ரீதியாக இதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.