திமுக இளைஞரணி செயலாளர் பதவியை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன் - உதயநிதி

திமுக இளைஞரணி செயலாளர் பதவியை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன் - உதயநிதி

திமுக இளைஞரணி செயலாளர் பதவியை மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கிறேன் - உதயநிதி

திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டிருப்பது மிகப்பெரிய பொறுப்பாக பார்ப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த 1980 ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்காவில் திமுக இளைஞரணியை அப்போதைய திமுக தலைவராக இருந்த கருணாநிதி தொடங்கி வைத்தார். திமுக இளைஞரணி செயலாளர் பதவிக்கு முதன் முதலாக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவியை முக.ஸ்டாலின் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக வகித்தார். இதையடுத்து திமுக பொருளாளராக முக.ஸ்டாலின் பதவி உயர்வு பெற்ற பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் தேதி திமுக இளைஞரணி செயலாளர் பதவி வெள்ளகோவில் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்து 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். மக்களவைத் தேர்தலுக்கு பின் திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய உதயநிதி, தனக்கு பொறுப்பு தேவையில்லை. தொண்டனாகவே இருந்து சேவை செய்ய விரும்புகிறேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அப்போது திமுக பொதுச் செயலாளராக இருந்த அன்பழகன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசும்போது, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செயல்களை கண்டு பெருமிதம் அடைவதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்பதற்கு... இதனை மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com