"என் தம்பிகளை இழந்துள்ளேன்" - உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் சூர்யா போனில் ஆறுதல்!

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கட்அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரு ரசிகர்களின் குடும்பத்தினரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு நடிகர் சூர்யா ஆறுதல் கூறியுள்ளார்.
actor surya
actor suryapt desk

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசராவ்பேட்டையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளையொட்டி மோபுரிவாரிபாலம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் பாபட்லா மாவட்டம் ஜே.பங்களூரைச் சேர்ந்த போளூரி சாய் ஆகியோர் தங்களது நண்பர்களுடன் சனிக்கிழமை இரவு நரசா ராவ்பேட்டையில் ஃப்ளக்ஸ் பேனர்களை கட்டி கொண்டிருந்தனர். அப்போது ஃப்ளக்ஸ் பேனர் இரும்பு ப்ரேம் அங்கிருந்த மின்சார கம்பியில் மோதியுள்ளது.

parent
parentpt desk

இதில், இருவரும் மீதும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நடிகர் சூர்யா, உடனடியாக உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உயிரிழந்த ரசிகர்களின் பெற்றோர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுததைப் பார்த்து கலங்கிய சூர்யா, இந்த இழப்பு தன்னை மிகவும் பாதித்துள்ளதாகவும், இரு தம்பிகளை இழந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய சூர்யா, அந்த இரு குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார். நடிகர் சூர்யா, வீடியோ காலில் பேசியதை பதிவு செய்த ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள், சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com